தெலுங்கானா ஶ்ரீசைலம் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் பலி.. 6 பேரின் உடல் மீட்பு!

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீசைலம்: தெலுங்கானா மாநிலம் ஶ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில் 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, இன்னும் 3 பேரின் உடல் மீட்கப்படவில்லை.

Recommended Video

    கொரோனாவால் சாகும் முன் செய்தியாளர் சந்தித்த வேதனை

    தெலுங்கானா ஶ்ரீசைலம் அணையின் இடதுகரையில் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது.

    Fire at Telangana Srisailam power station; 9 feared trapped

    இதனையடுத்து மின்நிலையம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது இரவுப் பணியில் பணியாளர்கள் இருந்தனர். உடனடியாக தீயை அணைக்கும் பணிகளும் மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

    இன்று மாலை வரை மொத்தம் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் பலியாகி உள்ளனர். உள்ளே சிக்கி பலியான 9 பேரில், 6 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் 3 பேரை மீட்கவில்லை. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Fire at Telangana Srisailam power station; 9 feared trapped

    ஶ்ரீசைலம் அணையானது கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணைதான் ஆந்திராவையும் தெலுங்கானாவையும் பிரிக்கிறது. தீ விபத்தின் போது தெலுங்கானா பொறியாளர்கள் பணியில் இருந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+