இலங்கை கடற்படை கைது செய்த 46 மீனவர்கள் மீட்பு- இன்று தமிழகம் வருகை
டெல்லி: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 46 பேர் இன்று தமிழகம் வந்தடைய இருக்கின்றார்கள்.
கடந்த 18 ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 46 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை 11 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார்.
அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம் தமிழக மீனவர்களை விடுதலை செய்து தமிழகத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்தார்.
அதன்படி, இலங்கையில் உள்ள இந்தியத்தூதர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று மாலை 24 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் விடுவிக்கப்பட்டன.
அவர்கள் தலைமன்னாருக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் 22 மீனவர்கள் மற்றும் படகுகள் இன்று மன்னாரை வந்தடைய இருக்கின்றார்கள்.
இன்று மாலையே 46 மீனவர்களும் படகுகளுடன் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் நேற்று டெல்லியில் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications