12 ஆண்டுக்கு பின்.. நெருங்கி வந்த பாகிஸ்தான் அமைச்சர்! கோவாவில் புறக்கணித்த ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா?
பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலவால் பூட்டோ ஜார்தாரி இந்தியா வந்த நிலையில் தீவிரவாத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்த சம்பவம் நடந்தது.
உலகில் பல நாடுகள் தங்களின் பிராந்தியங்களின் பாதுகாப்புக்காக பல நாடுகளை இணைந்து தனி அமைப்புகளை உருவாக்கி உள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இது கடந்த 2001ல் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மேலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.
Recommended Video
இந்த நாடுகள் தங்களுக்கு இடையேயான அரசியல், பொருளாதாரம், சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும். இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது.
இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் வந்தனர். மேலும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வந்தார். கடந்த 2011ம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வந்த நிலையில் அதன்பிறகு யாரும் வரவில்லை. இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு வந்த அமைச்சர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவையும், ஜெய்சங்கரை நோக்கி நெருங்கி நடந்து வந்தார். அப்போது அவரை ஜெய்சங்கர் கைகளை கூப்பி வரவேற்றார்.

மாறாக ஜெய்சங்கர், பிலாவல் பூட்டோவிடம் கைகளை குலுக்கி வரவேற்க மறுத்தார். பொதுவாக இருநாடுகளின் அமைச்சர்கள், முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரதிநிதிகள் தங்களிடையே நல்ல உறவு என்பதை வெளிப்படுத்தும் வகையில் கைகள் குலுக்குவதும், லேசாக கட்டித்தழுவி கொள்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் ஜெய்சங்கர் அப்படி எதையும் செய்யவில்லை. இதுதொடர்பான வீடியோ வெளியாகி விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் ஜெய்சங்கர் ஏன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு கைகுலுக்கவில்லை என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனை பலமுறை இந்தியா கைவிட கூறியும் பாகிஸ்தான் கேட்வில்லை.
மேலும் பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணமாக இருந்தது. அதோடு தொடர்ந்து காஷ்மீரில் பிரச்சனையை பாகிஸ்தான் கிளறி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் ஜெய்சங்கர், பிலாவல் பூட்டோவிடம் கைகுலுக்காமல் அவரை புறக்கணித்தார். இருப்பினும் ஷாங்காய் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் நடப்பதால் நாகரீகம் கருதி கைகூப்பி வரவேற்றார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications