பாஜகவில் இணைகிறார் ஜார்க்கண்ட் Ex முதல்வர் சம்பாய் சோரன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நள்ளிரவில் பரபர
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார். இதை அசாம் முதல்வரும் ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கே திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த பிப். மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார்.

அப்போது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியில் இருந்து சம்பை விலக வேண்டியிருந்தது. இருப்பினும், அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாகச் சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், டெல்லி சென்று அவர் பாஜக தலைவர்களையும் சமீபத்தில் சந்தித்திருந்தார். இப்போதே அவர் பாஜகவில் இணையலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது அவர் இணையவில்லை. . கட்சித் தலைமை தன்னை அவமானப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய சம்பாய் சோரன், அரசியலில் இருந்து விலகுவது, புதிய கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேருவது ஆகிய 3 ஆப்ஷன்கள் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார். இதை அசாம் முதல்வரும் ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார்.
67 வயதான சாம்பாய் சோரன் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, "ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், புகழ்பெற்ற பழங்குடியின தலைவருமான சாம்பாய் சோரன் சற்று நேரத்திற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவர் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக












Click it and Unblock the Notifications