ஊர் ஊராக சென்று செல்பி எடுக்கும் மோடிக்கு விவசாயிகளை பார்க்கதான் நேரமில்லை… ஜி. ராமகிருஷ்ணன் காட்டம்
ஊர் ஊராக சென்று செல்பி எடுக்கும் பிரதமர் மோடிக்கு விவசாயிகளை பார்க்க மட்டும் நேரமில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 37 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

சாட்டை அடி
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி போன்று வேடமணிந்த ஒருவர், விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனநலம் பாதிப்பு
இதனைத் தொடர்ந்து இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை நடத்தினார்கள். தங்களது சட்டையை கிழித்துக் கொண்டு சாலையில் ஓடுவது போன்று விவசாயிகள் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஜி. ராமகிருஷ்ணன் சந்திப்பு
இந்நிலையில், 37 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை இன்று டெல்லி சென்ற சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

செல்பி மோடி
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், ஊர் ஊராக சென்று செல்பி எடுத்துக் கொள்ளும் மோடிக்கு விவசாயிகளை மட்டும் பார்க்க நேரமில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், விவசாயிகளை தொடர்ந்து மோடி அவமானப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

கார்ப்பரேட் ஆட்சி
மேலும், மோடி ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜி. ராமகிருஷ்ணன், விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications