3000 அடி உயரம்.. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர்.. பூசாரியின் செயலை பாருங்க.. திகில் வீடியோ
3000 அடி உயரத்தில் மலை முகட்டில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு பூசாரி ஒருவர் பூஜை செய்யும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
ராஞ்சி: கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தோல்கால் விநாயகர் சிலை குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
முழு முதற் கடவுளாக விநாயகர் அறியப்படுகிறார். எந்த காரியம் செய்தாலும் அது வெற்றி பெற கஜமுகனை வழிபட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அது போல் எந்த தெய்வத்தின் கோயிலுக்கு சென்றாலும் கோயிலில் முதலில் இருப்பவரும் மூஷிக வாகனத்தார்தான்.
அவரை வணங்கிவிட்டுத்தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். இதற்கு புராண கதை இருக்கிறது. அரசமரத்தடி பிள்ளையார் முதல் ஆதிசேஷன் முன்பு இருக்கும் பிள்ளையார் வரை ஒவ்வொரு விசேஷங்கள் உள்ளன.

விநாயகர் கோயில்கள்
இந்தியாவில் புகழ்பெற்ற பல விநாயகர் கோயில்கள் உள்ளன. எனினும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோயில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பைலாடிலா மலை தொடரில் இந்த விநாயகர் சிலை அமைந்துள்ளது. இந்த மலையில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது.

3000 அடி உயரம்
இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் காணப்படுகிறது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த மலை முகட்டில் உள்ள இந்த விநாயகர் கோயில் சிறிய முரசு வடிவில் உள்ளது. அதன் மேல் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த இடத்தை பார்ப்பதற்கே ஒரு வித அச்சம் எழுகிறது. 3000 அடி உயரம் என்றால் சும்மாவா. அதுவும் சிறிய அளவிலான செங்குத்தான பாறையில் அமைந்துள்ளது.

கோயில் பூசாரி
இந்த கோயிலுக்கு பூசாரி ஒருவர் தினமும் வந்து பூஜை புனஸ்காரங்களை செய்கிறார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகச் சிறிய அளவிலான அந்த பாறையில் எப்படியோ ஏறி வந்த பூசாரி நீரால் விநாயகர் சிலையை சுத்தம் செய்கிறார். பின்னர் மலர் வைத்து கற்பூர ஆரத்தி காட்டுகிறார். இந்த ஆரத்தியை பக்தர்கள் எப்படி காண்கிறார்கள் என்றால், அந்த பிள்ளையாரை சுற்றி இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நிறைய சிறிய பாறைகள் உள்ளன. அந்த பாறை மீது ஏறி நின்று கொண்டு வழிபடுகிறார்கள்.

பூசாரியின் பூஜை
மேலே இருந்து கீழே விழுந்தால் அவ்வளவுதான். கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு மிகவும் ஆபத்தான இடமாக உள்ளது. அந்த பூசாரி சுத்தப்படுத்தும் நீரில் வழுக்கி விழுந்தால் நினைத்து பார்க்கவே ஈரக்குலை நடுங்குகிறது. இத்தனை ஆபத்துகள் இருந்தும் எத்தனை கடவுள் பக்தியுடன் தன் உயிரை பணயம் வைத்து வந்து பூஜிக்கிறார். அது போல் பக்தர்களும் ஆபத்தை பற்றி கவலைப்படாமல் தெய்வ வழிபாடு நடத்துகிறார்கள். இந்த சம்பவத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள்.

45 நிமிடங்கள்
இந்த விநாயகர் கோயிலை அடைய 45 நிமிடங்கள் ஆகுமாம். இந்த கோயில் முரசு வடிவில் இருப்பதால் இந்த விநாயகர் தோல்கால் விநாயகர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயில் நாக வம்சத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் 9 அல்லது 10 ஆவது நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலை அடைய காட்டு வழியைதான் நாட வேண்டும். இதற்கென சாலை வசதி இல்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications