கோவாவில் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 2 டெல்லி பெண்கள் பகீர் வாக்குமூலம்
பனாஜி: தங்களை நிர்வாணமாக்கி, மதுவும், போதைப் பொருளும் கொடுத்து பலாத்காரம் செய்ததாக கோவாவில் 5 பேரால் சீரழிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 2 பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் டெல்லியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் போன்று நடித்த 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சீரழிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

கடத்தல்
நாங்கள் பாகா கடற்கரைக்கு சென்றபோது எங்கள் டாக்சியை அந்த 5 பேரும் வழிமறித்து டிரைவரை அடித்தனர். அதன் பிறகு ஒருவர் எங்களை ஊருக்கு வெளியே இருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மற்றவர்கள் பைக்குகளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களின் போன்கள், ஏடிஎம் கார்டுகள், பணத்தை எடுத்துக் கொண்டனர். எங்கள் கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரமும், டாக்சி டிரவைரிடம் பறித்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரத்தையும் எடுத்தனர்.

வீடியோ
அந்த 5 பேருடன் ஒரு பெண்ணும் இருந்தார். அவரும் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறினார். அந்த பெண் சோதனை செய்வதாகக் கூறி என் ஆடையை அவிழ்த்தார். அவர்கள் எங்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தனர்.

போதைப்பொருள்
அவர்கள் எங்களுக்கு குடிக்க தண்ணீருக்கு பதில் மதுவை அளித்தனர். பின்னர் போதைப் பொருள் கொடுத்து 5 பேரும் எங்களை ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

கொடுமை
5 பேரும் ஈவு, இரக்கமின்றி எங்கள் பலாத்காரம் செய்தனர். எனக்கு ரத்தப் போக்கு ஏற்படும் வரை அவர்கள் நிறுத்தவில்லை என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அந்த பெண்களை 3 நாட்களாக கண்காணித்து அதன் பிறகு அவர்களை கடத்தி சீரழித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications