2024 லோக்சபா தேர்தலில் மமதா பானர்ஜிதான் பிரதமர் வேட்பாளர்...கொல்கத்தாவில் ஒலித்த கோஷம்!
கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார்.
கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோலாய் கடாக், பிரத்யா பாசு ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.

டார்ஜிலிங் அரசியல்
மோலாய் கடாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் டார்ஜிலிங் அரசியலில் புதிய பயணம் எங்களுக்கு... இந்த தலைவர்கள் வருகையால் திரிணாமுல் காங்கிரஸ் வலிமை பெறும் என்றார். பிரத்யா பாசு கூறுகையில், பாஜக மக்களை மத ரீதியாக பிரித்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் அரசியலை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடித்தது. டார்ஜிலிங் மேம்பாட்டுக்காக மமதா பானர்ஜியை அந்த மக்கள் நம்புகின்றனர் என்றார்.

மமதா பிரதமர் வேட்பாளர்
திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பினய் தமாங் கூறியதாவது: நான் 164 நாட்களுக்கு முன்னர் என்னுடைய கட்சியில் இருந்து விலகினேன். அப்போது முதலே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். எங்களைப் பொறுத்தவரையில் மமதா பானர்ஜியை 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாட்டின் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என விரும்புகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளில் இணைந்ததில் பெருமிதம் கொள்கிறோம். நிச்சயம் பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நாங்கள் வீழ்த்துவோம். இவ்வாறு பினய் தமாங் கூறினார்.

மமதாவின் கூட்டணி கணக்கு
2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். டெல்லி, மும்பையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் மமதா பானர்ஜி நடத்தினார். காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி என்பது மமதாவின் இலக்கு. அதனால்தான் மாநில கட்சிகள் மட்டுமே ஒருங்கிணைந்து செயல்பட்டால் பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ரேஸில் மமதா, சரத் பவார்
அப்படி ஒரு மாநில கட்சிகளின் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அல்லது மமதா பானர்ஜி ஆகியோரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனவும் கருதப்படுகிறது. பொதுவாக எதிர்க்கட்சிகளின் அணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் முன்னிறுத்தப்படுவர். ஆனால் இதனை மமதா பானர்ஜி நிராகரித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் மமதா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கோஷம் கொல்கத்தாவில் இருந்து தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications