ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் திருத்தம் நிறைவேற்றம்-மத்திய அரசு அதிர்ச்சி!
டெல்லி: ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் அதிரடியாக திருத்தத்தைக் கொண்டு வந்து வெற்றிகரமாக நிறைவேற்றியதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த புதிய வியூகம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டின் நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற இரு சபைகளிலும் விவாதம் நடைபெற்றது.

அதே நேரத்தில் ஜனாதிபதியின் உரையில், கருப்பு பணத்தை மீட்கவும், மேல்மட்ட ஊழலை தடுக்கவும் மத்திய அரசு தவறியது பற்றி எதுவும் கூறப்படவில்லை என எதிர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தன.
இதனால் இதுதொடர்பாக ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் அங்கு மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் அத் திருத்தத்தை கொண்டுவரவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார். பிரதமரின் பதிலுரையின் போது சரத்யாதவ், மாயாவதி போன்றவர்கள் இடைமறித்தனர். அவர்கள் பேசுவதற்கு நரேந்திர மோடி வழிவிட்டார்.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் எம்.பி. சீத்தாராம் யெச்சூரி பேச முயற்சித்த போது பிரதமர் அதனை ஏற்கவில்லை. அத்துடன் பிரதமர் மோடி உரையாற்றி முடித்த பின்னர் சபையை விட்டு வெளியேறியும் விட்டார்.
பிரதமர் பேசி முடித்ததும் பொதுவாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை திருத்தம் ஏதும் இல்லாமல் ஒருமனதாக நிறைவேற்றுவது வழக்கம்.
ஆனால் நேற்று பிரதமர் பேசி முடித்ததும் சபையைவிட்டு வெளியேறியதில் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி மற்றும் சி.பி.எம். எம்.பி. பி.ராஜீவி ஆகியோர் ஜனாதிபதி உரையில் மேல்மட்ட ஊழலை தடுக்கவும், கருப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசு தவறியது பற்றி குறிப்பிடப்படவில்லை‘ என்பதை தீர்மானத்தில் திருத்தமாக சேர்க்க வலியுறுத்தினர்.
இருப்பினும் இந்த திருத்தத்தை திரும்பப் பெறுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சி எம்.பி.க்களைக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு சீதாராம் யெச்சூரி பதிலளிக்கையில், பொதுவாக இதுபோன்ற வேண்டுகோளை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், 14 மணி நேரம் விவாதம் நடைபெற்ற பிறகும், பிரதமரின் பதிலுரைக்கு விளக்கம் கேட்க எங்களை அனுமதிக்கவில்லை.
பிரதமரும் தனது பதிலுரையை முடித்தவுடன் சபையை விட்டு வெளியேறி விட்டார். எனவே, திருத்தம் கொண்டு வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அதிரடி காட்டினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications