குஜராத் சட்டசபை தேர்தல்: 8ஆவது முறையாக பாஜக ஆட்சி? புதிய வரலாறு படைக்கத் தயாராகும் தாமரை
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 63.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து இறுதி கட்ட வாக்கு பதிவு கடந்த 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி நடந்தது. இதில் 58.68 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இரு கட்டங்களையும் சேர்த்து 66.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸும் ஆம்ஆத்மியும் தீவிரம் காட்டி வருகின்றன.

25 ஆண்டுகள்
தொடர்ந்து 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் மேலும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடர பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. குஜராத்தில் தமிழர்கள் வசிக்கும் தொகுதிகளில் பெரும்பாலும் பாஜகவுக்கே ஆதரவு அலை வீசுகிறது. இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகித்தது. அது போல் குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில் 152 இடங்களில் பாஜகவும் காங்கிரஸ் 21 இடங்களிலும் ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

8ஆவது முறை
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 8ஆவது முறையாக பாஜகவே ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் இப்போதே வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு பாஜகவை தோற்கடிப்போம் என உறுதியாக நம்புகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்தே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என தேர்தல் வியூகங்கள் வெளிப்படுத்துகின்றன. குஜராத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 37 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்றைய தினம் எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.

வெல்ல போவது யாரு
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் வியூகங்கள் வெற்றி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருவதால் குஜராத் தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபடவில்லை. அவருக்கு பதிலாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டார். எனவே இந்த தேர்தலில் ஜெயிக்க போவது யாரு?
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications