இவர்கள் ஏன் நீச்சலடித்து பள்ளிக்குப் போகிறார்கள்?.. குஜராத் அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி
டெல்லி: குஜராத் மாநிலம் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் ஆற்றை நீந்திக் கடந்து போய் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருவது தொடர்பாக குஜராத் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாணவர்கள் ஏன் இப்படி நீச்சலடித்துப் போய் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் குஜராத் அரசு விளக்கம் அளிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
இதுகுறித்து அது அனுப்பியுள்ள நோட்டீஸில், இந்த சம்பவமானது, குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமையையும், பாதுகாப்பையும் மீறுவதாக உள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மத்திய குஜராத்தில் உள்ள சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் சுற்று வட்டாரக் குழந்தைகள் தினசரி ஆற்றைக் கடந்து போய் படித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளிகளே இல்லாததால் இந்த அவல நிலை.
மேலும் பிள்ளைகள் நீச்சலடித்துப் போவதை அவர்களின் பெற்றோர்கள் சுற்று வைத்து தினசரி கண்காணிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டுமாறு பல காலமாக கோரியும் குஜராத் அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications