குஜராத் ஊழலில் தான் வளர்ச்சியடைந்துள்ளது... வளர்ச்சிப் பணிகளில் அல்ல : தேவகவுடா

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
3-வது அணி குறித்து பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இது சரியல்ல. அவர் தேவையற்றதை பேசக்கூடாது. நான் 13 கட்சிகளின் ஆதரவுடன் நாட்டின் பிரதமராக 10 மாதங்கள் பணியாற்றி உள்ளேன். அப்போது எந்த நேரத்திலும் யாரை பற்றியும் அவதூறாக பேசியது இல்லை.
குஜராத் மாநிலத்துக்கு மட்டும் தான் மோடி முதல்வர். ஆனால், இப்போதே பிரதமர் ஆகிவிட்டது போன்று அவர் பேசி வருகிறார். மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடுகிறது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.
குஜராத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதாக கூறி வருகிறார்கள். ஆனால், அங்கும் ஊழல் அதிகளவில் உள்ளது. வளர்ச்சி பணிகளில் பின்னடைவு உள்ளது. மோடியை பா.ஜ.க தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்து உள்ளது. நாடு அல்ல. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். மோடிக்கு ஆட்சி நிர்வாக அனுபவம், அரசியல் ஞானம் இல்லை.
பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை மோடி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது மோடியின் தகுதிக்கு சரியானது அல்ல. பா.ஜ.க தலைவர்கள் வாஜ்பாய், அத்வானியை காட்டிலும் பெரியவர்கள் அந்த கட்சியில் யாரும் இல்லை. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் மற்றவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது. 3-வது அணியின் பலம் குறித்து தேர்தலுக்கு பிறகு தெரியும். அதை மக்கள் முடிவு செய்வார்கள்' என இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications