காக்கிச் சட்டையில் பவர் இருக்குனு நெனச்சேன்.. ஆனால் ரேங்கில்தான் அதிகாரமே இருக்கு.. பெண் "சிங்கம்"
சூரத்: தான் ஒரு பெண் சிங்கம் இல்லை என்றும் சாதாரண போலீஸ் அதிகாரி என்றும் தனது கடமையை செய்ததாகவும் குஜராத்தில் அமைச்சர் மகனின் காரை மடக்கிய காவலர் சுனிதா தெரிவித்துள்ளார்.
Recommended Video
குஜராத் மாநிலம், வராச்சா சாலை எம்எல்ஏ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. இவரது நண்பர்கள் ஊரடங்கு அமலில் உள்ள ஜூலை 8-ஆம் தேதி இரவு நேரத்தில் காரில் பயணம் செய்துள்ளார்கள்.
அப்போது அவர்கள் மாஸ்க் அணியவில்லை. அப்போது அங்கு பணியிலிருந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர்கள் அமைச்சரின் மகனுக்கு போன் செய்ததில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து பெண் காவலரை மிரட்டினார்.

நிறுத்திய சுனிதா
அப்போதும் அசராத அந்த பெண் காவலர் சுனிதா, யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன் என அமைச்சரின் மகனிடம் முகத்தில் அடித்தபடி தெரிவித்தார். இதையடுத்து அவர் காவல் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். இவரை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். சிலர் இவருக்கு பெண் சிங்கம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

சாதாரண அதிகாரி
இந்த நிலையில் விடுப்பில் இருந்த அவர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் நான் பெண் சிங்கம் இல்லை. சாதாரண போலீஸ் அதிகாரி. நான் எனது கடமையை செய்தேன். இது போல் எல்லா போலீஸாரும் துணிந்து செய்ய மாட்டார்கள் என பொதுமக்கள் கூறுகிறார்கள். அவ்வாறு மக்கள் கூறும் போது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் காக்கிச் சட்டையில்தான் பவர் இருக்கிறது என நினைத்தேன்.

அமைச்சர்
ஆனால் இப்போதுதான் அது கிரேட் ரேங்கில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் ஐபிஎஸ் அதிகாரியாக தயாராகி வருகிறேன். அந்த ரேங்க்தான் எனக்கு வேண்டும். அமைச்சர் மகனுடனான பிரச்சினை எளிதாக தீர்வு கண்டுவிடப்படும். எனக்கு அதிகாரப் பதவி ஏதும் இல்லாததால் அது ஒரு சூயிங் கம் மாதிரி இப்படித்தான் இருக்கும்.

முட்டி போட
மக்கள் நடமாட்டம் சரியான காரணங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த அமைச்சர் மகனின் நண்பர்களுக்கு அது போன்ற எந்த ஒரு காரணமும் இல்லை. என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் நான் விட்டுவிடுவேன் என நினைத்து மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் சட்டப்படி நான் எதையாவது செய்ய வேண்டும். அபராதம் விதிக்க என்னிடம் சல்லான்கள் இல்லை. அதனால் விதிகளை மீறியதற்காக அவர்களை முட்டி போட வைக்க எண்ணினேன்.

முயற்சி
தற்போதைய சூழலில் நான் மன உளைச்சலில் இருக்கிறேன். அதனால் ஐபிஎஸ் அதிகாரியாக நான் விரும்பவில்லை. ராணுவ அதிகாரியாக விரும்பினேன். ஒரு சில காரணங்களுக்காக அது போல் என்னால் ஆக முடியவில்லை. ஐபிஎஸ் அதிகாரிக்கான தேர்வில் தோல்வி அடைந்தால், வழக்கறிஞராகவோ பத்திரிகையாளராகவோ ஆக முயற்சிப்பேன் என்றார் சுனிதா யாதவ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications