69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கு: தண்டனை விவரம் நாளைமறுநாள் அறிவிப்பு
அகமதாபாத்: குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளை மறுநாள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மொத்தம் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர். ஒருவரைக் காணவில்லை.
கடந்த 2-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் 24 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் 36 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
24 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஆனாலும் தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 24 பேரில் 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வாதிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications