சூரத்தை தொடர்ந்து அகமதாபாத்திலும் ஹர்திக் படேல் மீது பாய்ந்தது தேசதுரோக வழக்கு!
அகமதாபாத்: சூரத்தைத் தொடர்ந்து அகமதபாத்திலும் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது. 2வது தேசதுரோக வழக்கில் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குக; இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து கட்டுங்கள் என்ற முழக்கத்துடன் போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் ஹர்திக் படேல். இவரது போராட்டத்தால் குஜராத் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானது.

இதனைத் தொடர்ந்து ஹர்திக் படேல் மீது பல்வேறு வழக்குகளை குஜராத் அரசு தொடர்ந்தது. இந்நிலையில் ராஜ்கோட்டில் இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போராட்டத்தை தடுக்க முயன்றதாக ஹர்திக் படேல் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவர் தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆனால் 2 நாட்களிலேயே ஹர்திக் படேல் விடுதலையாகிவிட்டார். இருப்பினும் சூரத் போலீசார், போலீசாரை கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதற்காக தேச துரோக வழக்கை ஹர்திக் மீது போட்டனர். இந்த வழக்கில் அக்டோபர் 23-ந் தேத் இவரை 14 நாள் சிறை காவலுக்கு ஹர்திக் அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் அகமதாபாத் போலீசார் நேற்று ஹர்திக்கை மற்றொரு தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்வதாக தெரிவித்தனர். இதனால் ஹர்திக் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதனிடையே ஹர்திக் படேல் மீதான தேசதுரோக வழக்குகளை எதிர்த்து அவரது தந்தை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications