பாலியல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோருகிறார் ஹார்வி வைன்ஸ்டீன்
தன்மீதுள்ள பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யுமாறு பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்லி வைன்ஸ்டீனின் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு கூறிய பெண்ணிடமிருந்து வந்த "வைன்ஸ்டீனுக்கு ஆதரவான" மின்னஞ்சல்களைக் சுட்டிக்காட்டி தங்களது இந்த தரப்பு மனுவை தாக்கல் செய்தனர் வைன்ஸ்டீன் தரப்பு வழக்கறிஞர்கள்.
மூன்று வெவ்வேறு பெண்களிடமிருந்து வந்த 6 குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் ஹார்லி வைன்ஸ்டீன்.
ஹார்லி வைன்ஸ்டீன் மீது குற்றம் சுமத்தியவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.
இந்நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று ஹார்லி வைன்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
- கைதான ஹார்வி வைன்ஸ்டீன் மீது பதிவான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்ன?
- ஹாலிவுட்: பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக புதிய திட்டம்
பாலியல் வன்புணர்வு என்று கூறப்படும் அந்த சம்பவத்துக்கு பிறகு, அதில் தொடர்புடைய பெண் வைன்ஸ்டீனுக்கு "நன்றி கூறுவது போன்றும் ஆதரவாகவும்" மின்னஞ்சல்கள் அனுப்பியதாக வைன்ஸ்டீன் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
எனவே இந்த மின்னஞ்சல்கள், இருதரப்பு சம்மத்துடனே நட்பு பாராட்டப்பட்டதாகவும், இது கட்டாய பாலியல் வன்புணர்வு ஆகாது என்பதையும் காட்டுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நியூயார்க் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஏப்ரல் 2013 மற்றும் பிப்ரவரி 2017ஆம் ஆண்டுக்குட்பட்ட காலங்களில் வைன்ஸ்டீன் மற்றும் அந்த பெண்மணிக்கு இடையே நடைபெற்ற மின்னஞ்சல் உரையாடல்களை வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மார்ச் 18, 2013 அன்று நியூயார்க் விடுதி ஒன்றில் வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக அந்த பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஏப்ரல் 11, 2013 அன்று "உங்களை விரைவாக பார்க்க விரும்புகிறேன் மேலும் எனக்காக நீங்கள் செய்யும் அனைத்தையும் பாராட்டுகிறேன்" என்று புகார் தெரிவித்த பெண் வைன்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் அனுப்பியதையும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் வைன்ஸ்டீன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த எதிர்தரப்பு வாதம் திருமணங்களில் அல்லது ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் காலங்களில் பாலியல் வன்புணர்வு நடைபெறவில்லை என்பதை புறக்கணிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைன்ஸ்டீன் மீது புகார் தெரிவித்த பெண் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
வைன்ஸ்டீனின் வங்கி கணக்கு திவாலானது குறித்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, தனிப்பட்ட மின்னஞ்சல்களை வெளியிடக் கூடாது என்றும் அவ்வாறு வெளியிட்டால் புகார் தெரிவித்தவரின் அடையாளம் வெளியாகும் ஆபத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதே நீதிபதி வியாழனன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட வைஸ்டீன் தரப்பு மனுவில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளியிடாமல் அந்த மின்னஞ்சல்களை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.
66 வயதாகும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது டஜன் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் புகார்களை தெரிவித்திருந்தனர்.
உடன்பாடில்லாத பாலியல் நடவடிக்கைகள் இருந்ததில்லை என்று தன் மீதான குற்றங்களை ஹார்வி வைன்ஸ்டீன் மறுத்து வந்தார்.
பிற செய்திகள்:
- சாமுராய் போர் வாளால் ஐஸ் கிரீம் வாகனத்தைத் தாக்கியவர்
- 'என் மகன் மிகவும் நல்லவன்' - ஒசாமா பின்லேடனின் தாய்
- இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன?
- டிரம்பின் ஊடக விமர்சனத்தை கண்டிக்கும் ஐநா
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?














Click it and Unblock the Notifications