பிக் பஜார் நிறுவனத்திற்கு பேங்க் லைசென்ஸ் கொடுத்தது யார்? சீதாராயம் யெச்சூரி கிடுக்கிப்பிடி
டெல்லி: பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி அதிகபட்சமாக ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கண்டித்துள்ளார்.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பணம் எடுக்க வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் அலைமோதி வருகின்றனர். வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் போதிய பணம் கிடைக்கவில்லை.

பிக் பஜாரில் பணம்
எனவே, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இனி பிக் பஜாரில் நாளை முதல் டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ஒருவர், டெபிட் கார்டு மூலம் அதிகபட்சமாக ரூ.2000 பணம் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

யெச்சூரி காட்டம்
இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கண்டித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் காட்டமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். https://twitter.com/SitaramYechury/status/801085157184663555
என்ன நடக்கிறது இங்கு? இந்த தனியார் நிறுவனத்திற்கு, வங்கி லைசென்ஸ்சை ஆர்.பி.ஐ கொடுத்ததார்? இந்த தனியார் நிறுவனத்திற்கு மட்டும் ஏன் அனுமதி?. இவ்வாறு சீதாரம் யெச்சூரி ஒரு டிவிட்டில் கூறியுள்ளார்.

பிரச்சினை என்ன
மற்றொரு டிவிட்டில் யெச்சூரி கூறியுள்ளதையும் பாருங்கள்: https://twitter.com/SitaramYechury/status/801085532235120640 ரீடெய்ல் நிறுவனத்தில் பணம் விநியோகம் செய்வது பிரச்சினை இல்லை. மோடி அரசு, போதிய அளவுக்கு நோட்டுக்களை வங்கிகள், ஏடிஎம்களுக்கு வழங்காததே பிரச்சினை.
|
கிராமங்களுக்கு தேவை பணம்
தனியார் ரீடெய்லருக்கு பணம் வழஹ்கும் இந்த தமாஷுக்கு பதிலாக, கிராமப்புற வங்கிகளுக்கும், ஏடிஎம்களுக்கும் மோடி அரசு கூடுதல் நோட்டுக்களை வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் சீதாராம் யெச்சூரி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications