பிக் பஜார் நிறுவனத்திற்கு பேங்க் லைசென்ஸ் கொடுத்தது யார்? சீதாராயம் யெச்சூரி கிடுக்கிப்பிடி
டெல்லி: பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி அதிகபட்சமாக ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கண்டித்துள்ளார்.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பணம் எடுக்க வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் அலைமோதி வருகின்றனர். வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் போதிய பணம் கிடைக்கவில்லை.

பிக் பஜாரில் பணம்
எனவே, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இனி பிக் பஜாரில் நாளை முதல் டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ஒருவர், டெபிட் கார்டு மூலம் அதிகபட்சமாக ரூ.2000 பணம் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

யெச்சூரி காட்டம்
இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கண்டித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் காட்டமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். https://twitter.com/SitaramYechury/status/801085157184663555
என்ன நடக்கிறது இங்கு? இந்த தனியார் நிறுவனத்திற்கு, வங்கி லைசென்ஸ்சை ஆர்.பி.ஐ கொடுத்ததார்? இந்த தனியார் நிறுவனத்திற்கு மட்டும் ஏன் அனுமதி?. இவ்வாறு சீதாரம் யெச்சூரி ஒரு டிவிட்டில் கூறியுள்ளார்.

பிரச்சினை என்ன
மற்றொரு டிவிட்டில் யெச்சூரி கூறியுள்ளதையும் பாருங்கள்: https://twitter.com/SitaramYechury/status/801085532235120640 ரீடெய்ல் நிறுவனத்தில் பணம் விநியோகம் செய்வது பிரச்சினை இல்லை. மோடி அரசு, போதிய அளவுக்கு நோட்டுக்களை வங்கிகள், ஏடிஎம்களுக்கு வழங்காததே பிரச்சினை.
|
கிராமங்களுக்கு தேவை பணம்
தனியார் ரீடெய்லருக்கு பணம் வழஹ்கும் இந்த தமாஷுக்கு பதிலாக, கிராமப்புற வங்கிகளுக்கும், ஏடிஎம்களுக்கும் மோடி அரசு கூடுதல் நோட்டுக்களை வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் சீதாராம் யெச்சூரி.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications