கேரளாவில் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்குமாம் – வானிலை மையம் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

திருவனந்தபுரம், வலியதுறை, செறியதுறை, விழிஞ்சம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முன் தினம் பெய்த மழையால் திருவனந்தபுரம் நகரம் ஸ்தம்பித்தது. நேற்றும் மழை நீடித்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.
தைக்காடு, கன்ணுமாமூலை, எஸ்.எஸ்.கோவில் ரோடு, தம்பானூர் பகுதிகளில் உள்ள சாலைகளில் முட்டளவுக்கு வெள்ளம் ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.
திருவனந்தபுரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மந்திரி சிவகுமார் தலைமையில் அதிகாரிகள் விரைந்துச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தால் திருவனந்தபுரம் நகருக்குள் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலையிலும் திருவனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதுபற்றி திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும் போது, கேரளாவின் தென்மாவட்டங்களில் இன்னும் 48 மணி நேரத்திற்கு கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications