கடைசி நம்பிக்கையும் போச்சு... கேஜ்ரிவால் பற்றி அன்னா ஹசாரே 'பொளேர்'
டெல்லி: "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்வரிவால் மீதான எனது கடைசி நம்பிக்கையும் போய்விட்டது" என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் டெல்லி அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சந்தீப் குமார், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி வெளியானதை அடுத்து, அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

"என்னுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இருந்த போது, கிராம சுயராஜ்யம் என்ற புத்தகத்தை எழுதினார். இப்போது டெல்லியில் நடந்து கொண்டிருப்பதுதான் கிராம சுயராஜ்யமா" என்று கேள்வி எழுப்பியுள்ள அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் மீதான தனது கடைசி நம்பிக்கையையும் போய்விட்டது என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் "இதற்கெல்லாம் கேஜ்ரிவாலிடம் பதிலே இல்லை. ஒருவர் எப்படி பட்டவர் என்பதை கண்டறிந்து, தவறுகள் ஏதுமற்றவர் என்பதை தெளிவுபடுத்திய பின்னர்தான் கட்சியில் சேர்க்க வேண்டும்" என்றும் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் இருப்பவர்கள் செய்யும் செயல்கள் தன்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications