எத்தனை காலத்திற்குத்தான் முதல்வர்களின் நினைவில்லங்களாக மாற்றுவீர்கள்?கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றம்
இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் முதலமைச்சர்களுக்கு நினைவில்லங்களை அமைப்பீர்கள், எல்லா முதல்வர்களின் இல்லங்களையும் நினைவில்லங்களாக மாற்ற முடியுமா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்கிப் பராமரிக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் இல்லங்கள் நினைவில்லங்களாகப் பராமரிக்கப்படுவதாகவும் இது புதிதல்ல என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி முதல்வர்களின் இல்லங்களை நினைவில்லங்களாக மாற்றுவீர்கள்? எல்லா முதலமைச்சர்களின் இல்லங்களையும் நினைவில்லங்களாக மாற்ற முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பினர். இப்படியே சென்றால் அமைச்சர்களின் இல்லங்களும் நினைவில்லங்களாகுமா என்றும் கேட்டனர்.
நீதித் துறைக்கு பல நீதிபதிகள் பெரும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். அவர்களது நினைவாக சிலை வைத்தால், நீதிமன்றத்தில் இடமிருக்குமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அரசுத் தரப்பை பதில் மனு தாக்கல் செய்யும்படி கூறிய உயர்நீதிமன்றம், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: இந்தியாவிற்கு ஆதரவாக விராட், சச்சின் ட்விட்டரில் பதிவு – டிரண்டாகும் ஹாஷ்டேக்
- தேர்தல் 2021: கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- நாளை இலங்கை சுதந்திர தினம் - தமிழில் தேசிய கீதத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications