கோடி ரூபாய் பட்ஜெட்டில் பார்ட்டி.. இறக்குமதி செய்யப்பட்ட டைமண்ட்.. நீரவ் மோடி லஞ்சம் கொடுத்த கதை
நீரவ் மோடி மோசடி செய்ய எப்படி எல்லாம் லஞ்சம் வழங்கினார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: நீரவ் மோடி மோசடி செய்ய எப்படி எல்லாம் லஞ்சம் வழங்கினார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. பல வித்தியாசமான முறைகளை இவர் பயன்படுத்தி இருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
சதுரங்க வேட்டையில் 'ஒருத்தன் ஏமாத்தணும்னா அவனோட ஆசையா துண்டனும்' என்று கூறியது போலவே இவர் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

கூடுதல் தொகை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆனால் 2000-3000 கோடி வரை இன்னும் மோசடி மதிப்பு அதிகமாகும் என்று சிபிஐ கணக்கு தெரிவித்துள்ளது. 13,000 கோடி வரை மோசடி நடந்துள்ளது.

14 பேர் கைது
வங்கி அதிகாரிகள் உட்பட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

பார்ட்டி கொடுத்தார்
இதில் பல கையெழுத்துக்கள் பார்ட்டி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு இருக்கிறது. பார்ட்டியில் வங்கி அதிகாரிகள் கேட்கும் அனைத்து விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கே 200 கோடி வரை நீரவ் செலவு செய்து இருக்கிறார் என்று சிபிஐயின் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

லஞ்சம்
அதேபோல் இவர் லஞ்சமாக கொஞ்சம் கூட பணம் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க நகைகள் மட்டுமே லஞ்சமாக கொடுத்து இருக்கிறார். இதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வைரம் பதித்த நகைகளை விற்பனை செய்து இருக்கிறார் என்று சிபிஐ தெரிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications