அமெரிக்க உதவி நிறுத்தப்பட்டால், பாகிஸ்தானில் என்னவெல்லாம் நடக்கும்?
பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத தொடரமைப்புகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் ஏறக்குறைய நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துவிட்டது. ஆனால் அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தி பாகிஸ்தானில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
அமெரிக்க உதவி எவ்வளவு குறைக்கப்படும் என்று இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு நிதியுதவி குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு ராணுவ நிதியுதவி (FMF) திட்டத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான 255 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்படும். அதோடு, தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்காக கூட்டணி ஆதரவு நிதியத்தின்கீழ் வழங்கப்படும் 700 மில்லியன் டாலர்கள் உதவியும் நிறுத்தப்படும்.
பாகிஸ்தானுக்கு பாதகமான அமெரிக்க கொள்கையினால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த நிதி பாதிப்பு இதைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
அதிலும் குறிப்பாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் 'குறிப்பிடப்படாத பிற பாதுகாப்பு உதவிகளுக்கான நிதி'யும் நிறுத்தப்படலாம் என்றும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு உதவித் தொகையை எந்த அளவு சார்ந்துள்ளது பாகிஸ்தான்?
குறைந்தபட்சம் குறுகிய காலக்கட்டத்திற்கு, பாகிஸ்தானிய ராணுவத்தின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்தலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர்.
"அமெரிக்காவின் உதவி நிறுத்தப்பட்டால், ராணுவ மற்றும் மனிதவள ஆதாரங்களை மேம்படுத்தும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் உடனடித் திட்டங்கள் முடங்கும்" என்று சொல்கிறார் பாதுகாப்புப் பகுப்பாய்வாளரும், 'பாகிஸ்தான் ராணுவம், அரசு மற்றும் சமூகம்' என்ற புத்தகத்தை எழுதியவருமான பேராசிரியர் ஹசான் அஸ்காரி ரிஸ்வி,
"பாகிஸ்தான் தனது ராணுவ அமைப்பை திறன்மிக்கதாக பராமரிக்கத் தேவையான நிதியுதவிகளை சீனா அல்லது வேறு எந்த ஒரு நட்பு நாடும் நீண்டகாலம் கொடுக்கமுடியாது என்பது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக இருக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.
அமெரிக்காவின் நிதி வெட்டுக்களுக்கு பாகிஸ்தானின் எதிர்வினையை இந்த பதில் விளக்குகிறது.
- அமெரிக்கா அளித்தது அவநம்பிக்கையைதான்: பாகிஸ்தான்
- BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு
பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குவாஜா ஆசிஃப் "நண்பரும் இல்லை கூட்டாளியும் இல்லை" என்ற அணுகுமுறை கொண்ட "நண்பன்-கொலைகாரன்" என்று அமெரிக்காவை சாடுகிறார். அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குர்ராம் தஸ்த்கிர், "அமெரிக்காவின் குறும்பு" இது என்று எச்சரிக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அரசின் பிற எதிர்வினைகள் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கின்றன.
15 ஆண்டுகளுக்கு மேலாக 120 பில்லியன் டாலர் செலவு செய்திருப்பதாக கூறும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இது பற்றி வெளியிட்ட அறிக்கையில் "தன்னிச்சையான காலக்கெடுக்கள், ஒருதலைப்பட்ச அறிவிப்புகள் மற்றும் இலக்குகளை மாற்றிக்கொள்வது போன்றவை பொது அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறது.
இதற்கிடையில், பிபிசிக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் இவ்வாறு கூறுகிறார், "பாகிஸ்தான் பணத்திற்காக ஒருபோதும் போராடியதில்லை, சமாதானத்திற்காகவே போராடியிருக்கிறது" என்று கூறினார்.
பிற செய்திகள்:
- ஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா?
- ஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா?
- பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு சிறுமி கொலை: பாகிஸ்தானில் கலவரம்
- அமெரிக்காவுக்கு அளித்த ராணுவ ஒத்துழைப்பை பாகிஸ்தான் நிறுத்துகிறதா?
-
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
மோடி தலைவராக இருக்கும் வரை.. இந்தியாவுக்கு நிச்சயம் உதவுவோம்! உறுதியாக சொன்ன டிரம்ப்! -
ஒரு வழியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட டிரம்ப்! இந்தியாவில் பெட்ரோல் விலை குறையுமா? -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு














Click it and Unblock the Notifications