பெங்களூரில் ஐபிஎம் ஊழியை கொலை: 3 மணிநேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த ஐபிஎம் ஊழியை குசும் ராணி சிங்க்ளா சமூக வலைதளம் மூலம் பழக்கமான நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குசும் ராணி சிங்க்ளா(31). ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நொய்டாவில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பெங்களூரில் உள்ள காடுகோடியில் உள்ள மகாவீ்ர் கிங்ஸ் அபார்ட்மென்ட்டில் தோழியுடன் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்த தோழி குசும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குசுமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர்.
குசும் லேப்டாப் வயரால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கூரான ஆயுதத்தாலும் தாக்கப்பட்டிருக்கிறார். போலீசார் 3 மணிநேரத்தில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்தனர்.
குசும் கடந்த 19 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் ஹரியானாவைச் சேர்ந்த சுக்பிர் சிங்குடன் நட்பு பாராட்டியுள்ளார். சுக்பிர் கடந்த செவ்வாய்க்கிழமை ஹரியானாவில் இருந்து பெங்களூர் வந்துள்ளார். அபார்ட்மென்ட்டுக்கு வந்த அவருக்கு குசும் மதிய உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்.
சுக்பிர் குசுமிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்க அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுக்பிர் குசுமை கொலை செய்துவிட்டு ஹரியானாவுக்கு சென்றுவிட்டார். போலீசார் ஹரியானா சென்று சுக்பிரை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் உள்ள போஸ்ட்டுகள் மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றை வைத்து தான் போலீசார் சுக்பிரை கண்டுபிடித்துள்ளனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications