ம.பி. உள்ளாட்சி தேர்தலில் வென்ற பெண்களின் கணவன்மார்களுக்கு பதவிப்பிரமாணம்.. சர்ச்சை
போபால்: மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள், உறவினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு மொத்தம் 40 மாநகராட்சிகள் உள்ளன. 169 நகராட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் நடந்து முடிந்தது.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 40 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சிகளையும் 169 நகராட்சிகளில் 123 நகராட்சிகளையும் பாஜக தன்வசப்படுத்தியது.

பாஜக சார்பில்
பாஜக சார்பில் 6,671 பேர் கவுன்சிலர்களாக வென்றுள்ளனர். இந்த தேர்தலில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்களாக தார் மற்றும் தாமோ மாவட்டங்களை சேர்ந்த 15 பெண்கள் போட்டியிட்டு வென்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

15 பெண்கள்
அவ்வாறு எடுத்த போது தேர்தலில் வென்ற மேற்கண்ட 15 பெண்கள் பதவிப்பிரமாணம் எடுக்காமல் அவர்களுடைய கணவரோ அல்லது உறவினர்களோ பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்ற பெண்கள் கணவரையும் உறவினர்களையும் அனுப்பிவிட்டு வீட்டிலிருந்ததாக கூறப்படுகிறது.

மாவட்ட பஞ்சாயத்து செயலாளர்கள்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தாமோ மற்றும் தார் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சன்டிரல் எனும் கிராமத்தில் நடந்த பதவிப்பிரமாணத்தின் போது லட்சுமி பாய், ராதா பாய், கிரண் பாய் ஆகியோர் பார்வையாளர்கள் போல் உட்கார்ந்திருந்தனர்.

5 பெண்களும் மேடைக்கு தூரத்தில்
மேலும் 5 பெண்களும் மேடைக்கு மிக தூரத்தில் இருந்தபடியே பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர். பெண்களுக்கு இடஒதுக்கீடு குறித்து பேசி வரும் நிலையில் வெற்றி பெற்ற பெண்களை பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவிடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் இந்த பெண்களுக்கு பதிலாக ஆண்களே பதவியில் அமருவார்கள் என்றே தெரிகிறது.

உள்ளூர் கட்சிக்காரர்
மேலும் இந்த பதவிப்பிரமாணத்தை உள்ளூர் கட்சிக்காரர் ஒருவர் எடுத்து நடத்தியதும் தெரியவந்தது. இந்த பதவிப்பிரமாணத்தில் கலந்து கொண்ட ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை உள்ளாட்சி பணியாற்ற அனுப்ப தயாராக இல்லை. அவர்கள் குடும்ப கலாச்சாரத்தை கண்டு அஞ்சுகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகார் இல்லை
வெற்றி பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சிகளில் பணியாற்ற முடியும். அவர்களுக்கு பதிலாக அவர்களுடைய உறவினர்களை பணியாற்ற அனுமதிக்க முடியாது. இது வரை எந்த பெண்ணுமே தனக்கு பதில் தனது கணவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என புகாரோ ஆட்சேபமோ தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications