காலுக்கு கீழே.. அரக்கர் உருவத்தில் காந்தி.. மேற்கு வங்க துர்கா பூஜையில் திடீர் சர்ச்சை.. பின்னணி!
கொல்கத்தா: வட மாநிலங்களில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மேற்குவங்கத்தில் வலதுசாரி அமைப்பினர் கொண்டாடிய துர்கா பூஜை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து கடவுள்களில் மிகவும் துடியான தெய்வம் துர்கை அம்மன். காலுக்கு கீழ் அரக்கனை வதம் செய்தவாறு கையில் ஆயுதங்களோடு பக்தர்களுக்கு அருள்பாளித்துக்கொண்டிருப்பார் இந்த அம்மன்.
இவ்வாறு இருக்கையில் மேற்குவங்கத்தில் வலதுசாரி இந்துத்துவ அமைப்பினரால் வடிவமைக்கப்பட்டுள்ள துர்கை அம்மன் சிலையின் கீழ் அரக்கனுக்கு பதில் காந்தி போன்ற பொம்மையை செய்து வைத்துள்ளனர்.

பாஜக ஆதரவுடன்...
இந்தியாவில் தீவிர இந்துத்துவ கருத்துகளோடு வலதுசாரி அமைப்புகள் பல இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை. இந்த அமைப்புகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது மேலெழுந்துள்ளன. இவ்வாறு இருக்கையில் தற்போது மற்றொரு சம்பவம் நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

மற்றொரு சம்பவம்
அதாவது, மேலே குறிப்பிடத்தைப்போல துர்கை அம்மனின் கீழ் இடம் பெற்றிருக்கும் அரக்கனின் உருவத்திற்கு பதில் காந்தியை ஒத்துள்ள உருவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. ஏற்கெனவே பாஜகவின் எம்பி பிரக்யா தாகூர் காந்தியின் உருவ படத்தை துப்பாக்கி கொண்டு சுட்ட சம்பவம் பாஜகவுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது. இதனையடுத்து தற்போது இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

காந்தியா?
காந்தி சிலை மட்டுமல்லாது, இந்த சிலை வைக்கப்பட்டுள்ள கொட்டகையின் மேல் கட்டப்பட்டுள்ள பேனரில் ரவிந்தரநாத் தாகூர் ஆகியோரின் படங்களுடன் கோட்சேவின் படமும் இடம்பெற்றுள்ளன. இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான அகில பாரத இந்து மகாசபையின் நிர்வாகி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "நீங்கள் கூறுவது உண்மைதான். இது காந்தியை போலதான் இருக்கிறது. ஒருவர் வழுக்கை தலையுடன் பெரிய கண்ணாடியை அணிந்திருந்தால் அவர் காந்தி என்று அர்த்தமா?

கண்டனம்
இங்கே எங்காவது இவர்தான் காந்தி என்று எழுதியிருக்கிறதா?" என்றும் கேள்வியெழுப்பினார். இந்த சம்வபவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மட்டுமல்லாது பாஜக தரப்பிலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை சிலையை அப்புறப்படுத்த வலியுறுத்தினர். பின்னர் அகில பாரத இந்து மகாசபையினர் சர்ச்சைக்குரிய சிலையை எடுத்துவிட்டு வேறு சிலை வைத்து வழிபாட்டை தொடர்ந்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications