பிரிவினைவாதிகளை அழைத்த பாக். தூதர்.. பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா!
டெல்லி: பாகிஸ்தானுடன் அடுத்த வாரம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா அதிரடியாக ரத்து செய்து விட்டது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து பாகிஸ்தான் தலையிடுவதை ஏற்கவே முடியாது. இதன் காரணமாகவே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இரு நாட்டு வெளியுறவுத்துறைச் செயலாளர்களும் ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். தற்போது அதை இந்தியா ரத்து செய்து விட்டது.

பாக். தூதரால் வந்த வினை
இந்தியாவின் கோபத்திற்கு பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தான் காரணம். இந்தியாவுடனான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க அவர் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை டெல்லிக்கு பேச்சுக்கு அழைத்திருந்தார். இது மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பேசிப் புண்ணியம் இல்லை
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறுகையில், இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானுடன் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வெளியுறவுத்துறைச் செயலாளரின் பாகிஸ்தான் விஜயத்திலும் பயன் இருக்காது. எனவே இந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

போனில் எச்சரித்த சுஜாதா சிங்
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங், பாகிஸ்தான் தூதர் பாசித்தை தொலைபேசியில் அழைத்து எச்சரிக்கை விடுத்தார். அப்போது ஒன்று எங்களுடன் பேசுங்கள், இல்லாவிட்டால் பிரிவினைவாதிகளுடன் பேசிக் கொள்ளுங்கள் என்று கடுமையாக கூறினார் சுஜாதா சிங்.

பாசித் அழைத்தது யாரை..
முன்னதாக பாகிஸ்தான் தூதர் பாசித்தை, ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மீர்வைஸ் உமர் பாருக், சையத் அலி ஷா கிலானி, பிரிவினைவாதத் தலைவர் சபீர் அகமது ஷா ஆகியோரை ஆலோசனைக்கு அழைத்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications