யு.எஸ். கோர்ட்டால் குற்றம்சாட்டப்பட்ட ஹைதராபாத் சகோதரர்கள் பற்றி ஐ.பி. விசாரணை
டெல்லி: அல் கொய்தாவுக்கு உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட 2 இந்திய சகோதரர்கள் சொந்த ஊரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா என்று உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் சகோதரர்கள் யஹ்யா பாருக் முகமது, இப்ராஹிம் ஜுபைர் முகமது. பாரூக் 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள லூசியானாவுக்கு சென்றார். அங்கு படித்து அவர் 2002ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார்.

2006ம் ஆண்டில் அவர் அமீரகத்திற்கு சென்று அங்கு உள்ள பிரபல நிறுவனத்தில் புராஜக்ட் மேனேஜராக சேர்ந்தார். ஜுபைர் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்தார். அதன் பிறகு அவர் டொலிடோவுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சகோதரர்கள் இமெயில் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இமெயில் மூலம் அல் கொய்தா பற்றி அதிகம் பேசியது எப்.பி.ஐ.யின் கவனத்தை ஈர்த்தது. முதன்முதலாக 2008ம் ஆண்டில் முதன்முதலாக அவர்களின் இமெயிலை எப்.பி.ஐ. கண்காணித்தது.
அதில் இருந்து 4 முதல் 5 ஆண்டுகளாக அவர்களின் இமெயில்கள் கண்காணிக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு வழிகளில் அல் கொய்தா அமைப்பினருக்கு பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அல் கொய்தாவுக்கு உதவியதாக அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது. எப்.பி.ஐ. அதிகாரிகள் எதுவும் கூறாவிட்டாலும் சகோதரர்கள் இந்தியாவில் ஏதாவது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்கு விசாரணை நடத்தப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications