யு.எஸ். கோர்ட்டால் குற்றம்சாட்டப்பட்ட ஹைதராபாத் சகோதரர்கள் பற்றி ஐ.பி. விசாரணை
டெல்லி: அல் கொய்தாவுக்கு உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட 2 இந்திய சகோதரர்கள் சொந்த ஊரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா என்று உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் சகோதரர்கள் யஹ்யா பாருக் முகமது, இப்ராஹிம் ஜுபைர் முகமது. பாரூக் 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள லூசியானாவுக்கு சென்றார். அங்கு படித்து அவர் 2002ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார்.

2006ம் ஆண்டில் அவர் அமீரகத்திற்கு சென்று அங்கு உள்ள பிரபல நிறுவனத்தில் புராஜக்ட் மேனேஜராக சேர்ந்தார். ஜுபைர் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்தார். அதன் பிறகு அவர் டொலிடோவுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சகோதரர்கள் இமெயில் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இமெயில் மூலம் அல் கொய்தா பற்றி அதிகம் பேசியது எப்.பி.ஐ.யின் கவனத்தை ஈர்த்தது. முதன்முதலாக 2008ம் ஆண்டில் முதன்முதலாக அவர்களின் இமெயிலை எப்.பி.ஐ. கண்காணித்தது.
அதில் இருந்து 4 முதல் 5 ஆண்டுகளாக அவர்களின் இமெயில்கள் கண்காணிக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு வழிகளில் அல் கொய்தா அமைப்பினருக்கு பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அல் கொய்தாவுக்கு உதவியதாக அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது. எப்.பி.ஐ. அதிகாரிகள் எதுவும் கூறாவிட்டாலும் சகோதரர்கள் இந்தியாவில் ஏதாவது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்கு விசாரணை நடத்தப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications