இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு- இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும்: மத்திய அரசு
டெல்லி: இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தினார்கள் என்று குற்றம்சுமத்தி சிறையில் அடைத்தது.
India's High Commission in Colombo will through lawyer appeal to higher Court against judgement by lower Court on 5 Indian fishermen.
— Syed Akbaruddin (@MEAIndia) October 30, 2014
இந்த வழக்கில் இன்று கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்றார்.