விரைவில் இந்தியா கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.. நிதி ஆயோக் ஷாக்!
இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிகை அதிர்ச்சியளித்துள்ளது.
டெல்லி: இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் மேலும் மோசமாகி வருகிறது. 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை இரண்டு மடங்காகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார்.

மக்கள் பாதிப்பு
இந்த கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், தற்போது இந்தியாவில் 60 கோடி இந்தியர்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பஞ்சத்தால் 2 லட்சம் மக்கள் உயிர் இழக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவை அதிகரிப்பு
இந்த தண்ணீர் பஞ்சம் நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. நாட்டின் தண்ணீர் தேவை 2030 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகும் அந்த ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் காணாமல் போகும்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நாட்டின் முக்கிய 20 நகரங்களில் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தண்ணீர் சிக்கனம்
நாட்டு நிலையை கருத்தில் கொண்டு தண்ணீர் சிக்கனம், மழை நீர் சேகரிப்பு விஷயங்களில் மக்கள் ஈடுபட வேண்டும். மரம் நட வேண்டும். அல்லது தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு ஏற்பட்ட கதி நமது ஊர்களுக்கும் ஏற்படும் அவல நிலை ஏற்படலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications