ராணுவம் பேசாது "வீரத்தை மட்டும் தான் காட்டும்" - பிரதமர் மோடி புகழாரம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் கட்டப்பட்ட ராணுவ நினைவிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவம் பேசாது, வீரத்தை மட்டும் தான் காட்டும் என்று கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், நாட்டுக்காக போரிட்டு தங்கள் உயிரை நீத்த ராணுவ வீரர்களைக் கெளரவிக்கும் வகையில், போர் வீரர்கள் நினைவிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 12.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.41 கோடி செலவில் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க நாளில், நமது துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை ஒரு பெரும் வாய்ப்பாக கருதுகிறேன்.

ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையினர், கடலோர காவல் படையினர் தங்களது உயிரை தியாகம் செய்வதால் தான் நாம் அமைதியாக உறங்குகிறோம். ராணுவம் பேசாது, வீரத்தை மட்டும் தான் காட்டும். அதேபோல் தான் நம்முடைய ராணுவ அமைச்சரும் பேச மாட்டார், அனைத்தையும் செயலில் காட்டுவார்.
ஸ்ரீநகரில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது ராணுவத்தினர்தான் மீட்பு பணியில் ஈடுபட்டு பெரும்பாலான மக்களை மீட்டனர். அப்பொழுது உதவி செய்யும் போது ஸ்ரீநகர் மக்கள் தானே நம்மீது கல் எறிந்தார்கள் என்று ஒரு போதும் ராணுவத்தினர் நினைக்கவில்லை.அதேபோல் உள்நட்டு போர் சமயத்தில் ஏமனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் சில பாகிஸ்தானியர்களையும் இந்திய ராணுவம் மீட்டது.
மக்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் உள்ளது. உலகிலேயே இந்திய ராணுவம் மட்டும் தான் மக்களுக்காக பாடுபடுகிறது. ராணுவத்தின் முன் இந்தியர்கள் அனைவரும் சமம். ஐநா அமைதிப்படைக்கு அதிக அளவில் படைபணிகளை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர்களின் சீருடை மற்றும் வீரம் குறித்து மட்டுமே நாம் பேசுகிறோம். அவர்கள் மனிதாபிமானத்தின் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இப்படிப்பட்டராணுவத்தினர் பயன் பெறும் வகையில் 'ஒரே பதவி; ஒரே ஒய்வூதியம்' திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசுதான். ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, கடற்படை போன்ற படைகளின் வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்வதன் காரணமாகத்தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications