போட்டுடைத்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி - பெகாசஸ் வாங்க ஆந்திர அரசை அணுகிய இஸ்ரேல் நிறுவனம்
அமராவதி : இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்களை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட பெகாசஸ் செயலியை ஆந்திர அரசிடம் விற்பனை செய்ய இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் முயற்சி செய்ததாக ஆந்திராவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
தனியார் இணைய ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது பெகாசஸ் நிறுவனம் ஆந்திர அரசை அணுகியதாக கூறினார்.
ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டி அரசு, சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது பெகாசஸ் செயலி வாங்கப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைக்குழு அமைக்க அண்மையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

உளவுத்துறையை அணுகிய இஸ்ரேல் நிறுவனம்
இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள வெங்கடேஷ்வர ராவ் "எந்த ஒரு நிறுவனமும் வேவு பார்ப்பது தொடர்பான கருவிகளை வாங்க காவல்துறை அல்லது உளவுத்துறையை அணுகும். இதுபோல் என்.எஸ்.ஓ. நிறுவனம் உளவுத்துறையை அணுகியது. நாங்கள் அரசிடம் இந்த தகவலை கொண்டு சென்றோம்.

நோ சொன்ன சந்திரபாபு நாயுடு அரசு
அப்போது இது சட்டப்படி சரியானதா என அரசு கேள்வி எழுப்பியது. நாங்கள் இதுசட்டப்படி சரியில்லை என விளக்கமளித்தோம். உடனே இந்த திட்டத்தை கைவிட அரசு எங்களுக்கு உத்தரவிட்டது. அத்துடன் இப்பிரச்சனை முடிந்து விட்டது." எனக்கூறினார்.

தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அவசியம்
பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த வெங்கடேஷ்வர ராவ், "அது குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. உலகில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து அரசிடம் நாங்கள் சொல்ல வேண்டும். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்க உதவும் கருவிகளை அரசிடம் நாங்கள் அறிமுகப்படுத்துவோம். தொழில்நுட்ப ரீதியாக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்." என்றார்.

அது ரொம்ப ரகசியமான விசயம்
இந்த உளவு மென்பொருளை வேறு மாநிலம் வாங்கியதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இது அவ்வளவு எளிதில் வெளியே தெரியக்கூடிய விசயம் அல்ல. அதனை விற்கும் நிறுவனங்கள் ரகசியம் காப்பவை. எனவே மற்ற மாநிலங்கள் குறித்து எங்களுக்கு தெரியாது." எனத் தெரிவித்தார்.
Recommended Video

மம்தா பானர்ஜி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டப்பேரவையில், பெகாசஸ் செயலியை வாங்குமாறு என்.எஸ்.ஓ. நிறுவனம் தங்களை அணுகியதாக கூறினார். 4 முதல் 5 ஆண்டுகள் வரை பெகாசஸ் செயலியை பயன்படுத்த ரூ.25 கோடியை என்.எஸ்.ஓ. நிறுவனம் கேட்டதாக அவர் கூறினார். இந்த நிலையில் ஆந்திர அரசையும் இஸ்ரேல் நிறுவனம் அணுகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications