அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து பணத்தை வசூலிக்க இந்தியாவுக்கு இத்தாலி கோர்ட் அனுமதி!!

ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் போன்ற உயர் பதவி வகிக்கும் தலைவர்கள் பயணம் செய்வதற்காக, உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இத்தாலி நாட்டின் பின்மெக்கானிக்கா கம்பெனியின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் 2010-ம் ஆண்டு ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா ஒரு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஹெலிகாப்டர் பேரத்தில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சுமார் 10% தொகையை கமிஷனாக கொடுத்து ஊழல் செய்ததாக தகவல்கள் வெளியாயின. இதில் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து எஸ்.பி.தியாகி, ஐரோப்பிய இடைத்தரகர்கள் கார்லோ ஜெரோசா, கிறிஸ்டியன் மைக்கேல், கெய்டோ ஹாசெக்கி உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தை கடந்த ஜனவரி 1-ந்தேதி இந்தியா ரத்து செய்தது.
இதையடுத்து அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வங்கி வாக்குறுதிகள், அபராதம் என சுமார் ரூ.5,470 கோடி வசூலிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழங்கி இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.240 கோடி மதிப்பிலான வங்கி வாக்குறுதியை இந்தியா ரொக்கப்பணமாக மாற்றிக் கொண்டு விட்டது.
இந்த நிலையில், தாங்கள் அளித்திருந்த ரூ.2,217 கோடி வங்கி வாக்குறுதிகளை இந்தியா பணமாக மாற்றிக் கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, இத்தாலியில் உள்ள மிலான் நீதிமன்றத்தில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பின்மெக்கானிக்கா வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த மிலான் நீதிமன்றம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் அளித்திருந்த வங்கி வாக்குறுதியை பணமாக மாற்றிக்கொள்ள இந்தியாவுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இத் தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த மிலான் நீதிமன்றம், ரூ.2,217 கோடி வங்கி வாக்குறுதியில் ரூ.1,818 கோடியை இந்தியா பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி இப்போது தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கு செலவுகளையும் இந்தியாவுக்கு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் திரும்ப வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications