ஆந்திரா ஜெகன் அதிரடி- இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்- பீகாரை தொடர்ந்து 2-வது மாநிலம்!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகாரைத் தொடர்ந்து நாட்டில் 2-வது மாநிலமாக ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான் இன்றளவும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு ஜாதிக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. அண்மையில் பீகார் மாநில அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை பகிரங்கப்படுத்தியது. இந்தியாவிலேயே பீகார் தான் முதல் மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. இப்புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஆந்திரா மாநில அரசு 2-வது மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்குகிறது. இன்று முதல் ஜனவரி 28-ந் தேதி வரை முதல் கட்டமாக அனைத்து கிராமங்களிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக மொபைல் ஆப் ஒன்றையும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆந்திராவில் மொத்தம் 700க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் என்கிற புள்ளி விவரம் சேகரிக்கப்படுகிறது. இதற்கான பணியில் ஆந்திரா அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் வார்டு செயலக பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
முதல் கட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் விடுபட்டோரை சேர்க்க ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை 2-வது கட்டமாகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கை பிப்ரவரி 15-ந் தேதி நிறைவு செய்யப்படும். லோக்சபா தேர்தல், ஆந்திரா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அதிரடி நடவடிக்கை ஆந்திராவில் மட்டுமல்ல நாட்டின் பிற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக உள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications