ஆந்திரா ஜெகன் அதிரடி- இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்- பீகாரை தொடர்ந்து 2-வது மாநிலம்!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகாரைத் தொடர்ந்து நாட்டில் 2-வது மாநிலமாக ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான் இன்றளவும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு ஜாதிக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. அண்மையில் பீகார் மாநில அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை பகிரங்கப்படுத்தியது. இந்தியாவிலேயே பீகார் தான் முதல் மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. இப்புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஆந்திரா மாநில அரசு 2-வது மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்குகிறது. இன்று முதல் ஜனவரி 28-ந் தேதி வரை முதல் கட்டமாக அனைத்து கிராமங்களிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக மொபைல் ஆப் ஒன்றையும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆந்திராவில் மொத்தம் 700க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் என்கிற புள்ளி விவரம் சேகரிக்கப்படுகிறது. இதற்கான பணியில் ஆந்திரா அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் வார்டு செயலக பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
முதல் கட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் விடுபட்டோரை சேர்க்க ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை 2-வது கட்டமாகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கை பிப்ரவரி 15-ந் தேதி நிறைவு செய்யப்படும். லோக்சபா தேர்தல், ஆந்திரா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அதிரடி நடவடிக்கை ஆந்திராவில் மட்டுமல்ல நாட்டின் பிற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக உள்ளன.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications