டெல்லிக்குள் 2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் ஊடுருவல்: உஷார் நிலையில் போலீஸ்
டெல்லி: ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் டெல்லியில் ஊடுருவியிருக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதன்கோட் தாக்குதலையொட்டி தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவியிருக்கக்கூடும் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தீவிரவாதிகள் டெல்லியில் உள்ள சில பிரபலங்களை தாக்கவும், சிலரை பிணையக் கைதிகளாக பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை அதிகாரிகளை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பஸ்ஸி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பொது இடங்களில் சந்தேகத்திற்கு இடமாக ஏதாவது பொருட்கள் கிடந்தால் உடனே போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து பஸ்ஸி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Citizens' vigil against suspicious persons/objects/activities is vital to counter terrorism. Report anything amiss no. 100 or helpline 1090.
— BS Bassi (@BhimBassi) January 3, 2016 சந்தேகத்திற்கு இடமான நபர்கள், செயல்கள், பொருட்களை பார்த்தால் தகவல் தெரிவிப்பது முக்கியம். அப்படி ஏதாவது நடந்தால் 100 அல்லது 1090 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார்.
பதன்கோட் தாக்குதலையடுத்து டெல்லி ஏற்கனவே உஷார் நிலையில் இருக்கையில் தற்போது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கியமான இடங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு வெளியே துணை ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டெல்லி போலீசார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ள வர அனுமதிக்கப்படுகிறது. பிரபல மார்க்கெட்டுகள், விஐபிக்கள் நடமாடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications