பிரதமர் மட்டும் ஓட்டுப்போட்டுவிட்டு பேசலாம்.. மோடி பேசக் கூடாது: கேட்கிறார் அருண் ஜேட்லி
டெல்லி: அசாம் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மட்டும் ஏன் அதேபோல் பேசக் கூடாது என்று பாஜகவின் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று வாக்களித்த நரேந்திர மோடி, கையில் தாமரை சின்னத்தை ஏந்தியபடி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக குஜராத் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனால் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான அருண்ஜேட்லி தமது இணையப் பக்கத்தில், அசாம் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு மோடி பேட்டியளித்தார்.
அதைப்போலத்தான் நரேந்திர மோடியும் வாக்களித்துவிட்டு பேட்டியளித்தார். பேட்டி அளிப்பது என்பது வேற. பொதுக் கூட்டம் நடத்துவது என்பது வேறு. அதைவிடுத்து நரேந்திர மோடி வழக்கு பதிவு செய்திருப்பது பாரபரட்சமான நடவடிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார்.