காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள்! ராணுவ முகாம் மீது தாக்குதல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சஞ்ஜ்வான் என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மும்முரமாக களமிறங்கி உள்ளன. வேட்பு மனுத் தாக்கல், வேட்பாளர்கள் அறிவிப்பு, கட்சி தாவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துகள் என ஜம்மு காஷ்மீர் தேர்தல் களைகட்டி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு தர்பார் என்ற இடத்தில் சஞ்ஜ்வான் ராணுவ முகாம் மீது இன்று காலை 10.50 மணியளவில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ முகாம் காவலரண் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நமது ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாதுகாப்புப் படையினர் அனைத்து இடங்களிலும் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டும் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் ஊடுருவ முயன்றனர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதேபோல குப்வாரா பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். செப்டம்பர் 18-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுவதால் பயங்கரவாதிகள் வெறிச்செயலில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்புள்ளதால் பாதுகாப்புப் படையினர் எதனையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications