Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: இளவரசி வக்கீலுக்கும் குட்டு வைத்த நீதிபதி குமாரசாமி

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது இளவரசியின் வழக்கறிஞருக்கும் சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கண்டனம் தெரிவித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இம்மேல்முறையீட்டு மனு மீது தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Jaya case: Judge warns Elavarasi's Lawyer

இதுவரை ஜெயலலிதா, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் இறுதி வாதத்தை நிறைவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர் சுதந்திரம் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நேற்று நீதிமன்றம் கூடியதும் சுதாகரன், இளவரசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை தொடர்ந்தார். இளவரசி சம்பந்தப்பட்ட சொத்து விவரங்கள் மற்றும் வருமானங்கள் குறித்து அவர் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

"குற்றவியல் நடைமுறை சட்டம் 313-ன்படி அரசு தரப்பில் 107 முதல் 120-வது சாட்சிகள் வரை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்களிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை" என்றார் சுந்தரம்.

இதற்கு பதிலளித்த நீதிபதி குமாரசாமி, "வாக்குமூலத்தை எடுத்து பாருங்கள். எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன" என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் சுதந்திரம், "650 கேள்விகள் கேட்கப்பட்டன" என்றார். பின்னர் நீதிபதி, அதில் அந்த சாட்சிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. ஏன் இல்லை என்று தவறாக சொல்கிறீர்கள். நீங்கள் வாக்குமூலத்தை முழுமையாக படிக்கவில்லையா? நீங்கள் வாய்மொழியாக கூறும் தகவல்களை ஏற்க முடியாது. எதை சொன்னாலும் அதற்கு ஆவணங்களை ஆதாரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நான் தீர்ப்பு எழுத முடியும். வெறும் வாதத்தை விட ஆவணங்களை தாக்கல் செய்து வாதிடுவது தான் மிக முக்கியம். கீழ்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வாதிடுங்கள் என்று காட்டம் காட்டினார்.

அப்போது அசராத வழக்கறிஞர் சுதந்திரம், இளவரசியின் வீடு ரூ.5.75 கோடியில் கட்டப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக மதிப்பிட்டுள்ளனர். இது தவறானது என்றார்,

உடனே நீதிபதி, சரி, இதற்கு ஆவணங்கள் இருந்தால் தாருங்கள். கூடுதலாக மதிப்பிட்டுள்ள தொகையை நீக்கி விடுகிறேன். ஏ1 முதல் ஏ4 வரை 4 பேருமே தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அவரவர்களின் வழக்கறிஞர்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் உள்ளன.

ஆனால் நீங்கள் அனைவரும் குற்றத்தை ஒட்டுமொத்தமாக மறுக்கிறீர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தவறான முறையில் பணம் சம்பாதித்து மற்ற 3 பேர்களின் பெயர்களில் சொத்துகளை சேர்த்தார் என்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றச்சாட்டு. இதை மறுத்து அதற்கான ஆவணங்களுடன் நீங்கள் வாதிட வேண்டும் என்று மீண்டும் சுட்டிக்காட்டினார்.

இதைபற்றியெல்லாம் கவலைப்படாத வழக்கறிஞர் சுதந்திரம், இந்த வழக்கு தவறாக போடப்பட்டுள்ளது என்றார்.

கடுப்பாகிப் போன நீதிபதி, தவறு என்றால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என்று மீண்டும் காட்டமாக கூறினார்.

இந்த வழக்கு விசாரணை இன்றும் நடைபெறுகிறது. இன்றுடன் வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிடுவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+