மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா! பிரதமர், ஜனாதிபதி ஏற்பு!!
டெல்லி: மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை வகித்து வந்தார் ஜெயந்தி நடராஜன். இந்நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயந்தி நடராஜன் கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருந்தார். இன்று ஜெயந்திர நடராஜனின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் கட்சிப் பணி ஆற்றுவதற்காக ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயந்தியைத் தொடர்ந்து கட்சி பணிக்கு திரும்ப மேலும் சில மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதுவரை ஜெயந்தி நடராஜன் வசம் இருந்த சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக பொறுப்புகள், பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications