Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு வழக்கு: முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் கைது

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் இன்று அதிரடியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக நேற்று பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவைகள் சிக்கின.

2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க ஒதுக்கீடு பெற்றார். முதல்வர் எனும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சுரங்க உரிமம் பெற்றார் ஹேமந்த் சோரன் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. இது உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திலும் பாஜக புகார் செய்துள்ளது.

Jharkhand mining case: ED arrests CM Hemant Sorens aide Prem Prakash

அதேநேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்ப்பதிலும் பாஜக தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது ஆளும் ஜே.எம்.எம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரை பாஜக வளைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜேஎம்எம் 30; காங்கிரஸ் 18; ஆர்ஜேடி, இடதுசாரிகள் 2 ; பாஜக கூட்டணிக்கு 31 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களை வளைப்பதில் பாஜக தீவிரம் காட்டுகிறது.

இப்பின்னணியில் சுரங்க முறைகேடு விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீடும் அடங்கும்.

ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அலமாரி ஒன்றில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருந்தது கண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் இது தொடர்பாக தனியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரேம் பிரகாஷ் வீட்டில் பாதுகாப்புக்காக இருந்த போலீசாரின் துப்பாக்கிகளே இவை என ராஞ்சி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+