50% கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதில் அளித்தால் போதும்- காஷ்மீர் கல்வித்துறை அதிரடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறையால் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் 50%க்கு மட்டுமே பதிலளித்தால் போதும் என அம்மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. இதனால் அங்கு மாணவர்கள் 100 நாட்களுக்கு அதிகமாக வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்களின் எதிர்கால கல்வி நலன் கருதியும் அவர்களை இந்த பாதிப்பில் இருந்து காப்பாற்றவும் தேர்வுகளில் கேட்கப்படும் 50% கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும் என்றும்,10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கும் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் தேர்வுகள் தொடங்கும் நேரம் பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக காலை 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முடிக்கப்பட்டுள்ள பாடித்திட்டத்தின் படி 50% கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அரசுக்கு சொந்தமான பள்ளிகளில் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications