மத்திய பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் எரித்துக் கொலை: சுரங்க மாபியா அட்டூழியம்
போபால்: மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்து வந்த 3 பேரால் பத்திரிக்கையாளர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பலகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் கோத்தாரி(40). அவர் இந்தி நாளிதழ் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார். சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்வோர் மீது அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் அவரை மிரட்டியும் அவர் கேட்கவில்லை.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு அவர் தனது நண்பருடன் பைக்கில் உம்ரி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சிலர் சந்தீப்பின் நண்பரை தாக்கிவிட்டு அவரை கடத்திச் சென்றனர். அந்த நபர்கள் சந்தீப்பை காரில் கொலை செய்துவிட்டு அவரது உடலை வர்தா மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே வைத்து எரித்துவிட்டனர்.
சனிக்கிழமை இரவு சந்தீப்பின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்த விஷால் தண்டி, ப்ரிஜேஷ் துஹர்வால் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராகேஷ் நஸ்வானியை போலீசார் தேடி வருகிறார்கள்.
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் உத்த பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஜகேந்தர் சிங் என்ற பத்திரிக்கையாளர் மீது அவரது வீட்டில் வைத்து போலீசார் தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications