அமித்ஷா மீதான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம்.. சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை தொடருகிறது
டெல்லி: சிபிஐசிறப்பு நீதிமன்ற, நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
குஜராத்தில் 2006ம் ஆண்டு நடைபெற்ற, சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற, நீதிபதி லோயா 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் உறவினர் திருமண நிகழ்ச்சி சென்ற போது திடீரென மாரடைப்பு என கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி லோயா இறந்தார். அவரது மரணத்தி்ல் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 3 தனித்தனி வழக்குகள் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த மரண வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழக்கு தொடர்ந்தவருக்கு வழங்க வேண்டும் என ஜனவரி 16ம் தேதி மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளதாக, விசாரணை குழு கோரும் மனுதாரர் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications