டிராபிக் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுப்புது திட்டங்கள்... கலக்கும் பெங்களூர் போலீஸ்!
ஹெல்மெட் போடாமல் செல்பவர்கள், சாலை விதியை மீறுபவர்கள் ஆகியோர்களுக்கு டிராபிக் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுப்புது செயல் திட்டங்களை கொண்டு வருகிறது பெங்களூர் போலீஸ்.
பெங்களூர்: ஹெல்மெட் போடாமல் செல்பவர்கள், சாலை விதியை மீறுபவர்கள் ஆகியோர்களுக்கு டிராபிக் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுப்புது செயல் திட்டங்களை கொண்டு வருகிறது பெங்களூர் போலீஸ்.
இதன்படி ஆந்திராவில் ஹெல்மெட் போடாமல் ஒரே பைக்கில் பயணித்த ஐந்து பேரை பார்த்து போலீஸ் ஒருவர் கையெடுத்து கும்பிட்டார். இதை நேற்று வீடியோவாக பெங்களூர் போலீசார் டிவிட்டரில் வெளியிடனர். அவரின் செய்கை பலருக்கும் பிடித்ததால் ஒரே நாளில் அவர் வைரல் ஆகியுள்ளார்.
மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர்களைப் பார்த்து அப்படிக் கும்பிட்டதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பெங்களூர் போலீஸ் தரப்பு வெளியிட்டுள்ள இந்த டிவிட் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
|
டிவிட்டரில் கலக்கும் பெங்களூர் போலீஸ்
மற்ற மாநிலங்களில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் போல் இல்லாமல் பெங்களூர் போலீஸ் மிகவும் வித்தியாசமான முறையில் நிறைய செயல்களை செய்து வருகின்றது. மக்களுடன் எளிதாக இணைந்திருக்க விரும்பி இவர்கள் உருவாக்கிய டிவிட்டர் ஹேண்டில் இந்தியா முழுக்க பிரபலம். எந்த பாதுகாப்பு பிரச்சனையாக இருந்தாலும் பெங்களூரில் இருக்கும் மக்கள் அந்த டிவிட்டர் பக்கத்தைத் தான் அணுகுகிறார்கள். இது பல நேரங்களில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.
|
ஹெல்மெட் போடாதவர்களை கையெடுத்து கும்பிட்டார்
இந்த நிலையில் ஒரே பைக்கில், ஹெல்மெட் அணியாமல் குடும்பமாக செல்லும் ஐந்து பேரைப் பார்த்து போலீஸ் அதிகாரி ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த போலீஸ் அதிகாரி ஆந்திரத்தை சேர்ந்தவர். இந்த வீடியோ வெளிவந்த சில நேரத்தில் பெருமளவில் வைரல் ஆனது. இந்த வீடியோவில் இருக்கும் போலீஸ் அதிகாரியின் பெயர் சுப குமார் என்பதாகும். இந்த வீடியோவை கர்நாடக போலீஸ் அதிகாரி அபிஷேக் கோயல் வெளியிட்டார். இது நேற்றைய செய்திகளில் பெரிதும் பேசப்பட்டது.

ஹெல்மெட் அணிவைத்து குறித்து விழ்ப்புணர்வு
இந்த நிலையில் மக்களிடையே ஹெல்மெட் போடும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக அபிஷேக் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ''மக்களுக்கு மற்ற அனைத்தையும் விட பாதுகாப்பும், உயிரும்தான் முக்கியம். எங்களால் இதற்கும் மேல் வேறு எதவும் செய்ய முடியாது. தயவு செய்து அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்'' என்று கூறினார்.
|
ஃபைன் போடலாமா அப்படியே விட்டுடலாமா
இந்த நிலையில் பெங்களூரு போலீஸ் அதிகாரி அபிஷேக் கோயல் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் போடுவது குறித்தும் ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் எல்லா நேரங்களிலும் இப்படி மென்மையாக இல்லாமல் , சில சமயங்களில் கண்டிப்பாக அபராதமும் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications