ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இளைஞர்களை சேருமாறு வற்புறுத்திய பெங்களூரை சேர்ந்தவர் கைது
ஜெய்ப்பூர்: ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இளைஞர்களை சேரச் சொல்லி வற்புறுத்தியதாக பெங்களூரைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் மேனேஜரை ஜெய்ப்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு மாநிலம் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சிராஜூதின். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சிராஜூதின் சமூக வலைதளங்கள் மூலம் உள்ளூர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மூன்று மாதமாக அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிராஜூதினின் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை கண்காணித்து வந்தோம். அதன்படி அவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இங்கிருந்து தீவிரவாதிகளுக்கு தகவல் கொடுப்பது, ஆள் சேர்ப்பது உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே அவரை கைது செய்துள்ளோம். சிராஜூதினின் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான புத்தகம், படங்கள், வீடியோ ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எடுத்து வரும் நிலையில் அந்த அமைப்புக்கு தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications