பாலியல் புகாரில் சிக்கியுள்ள கார்த்திக் கவுடா காவல் நிலையத்தில் இன்று மீண்டும் ஆஜர்
பெங்களூர்: சதானந்தகவுடா மகன் கார்த்திக் கவுடா போலீஸ் நிலையத்தில் இன்று மீண்டும் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ள நிலையில், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கன்னட நடிகை மைத்திரி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கார்த்திக் கவுடாவுக்கு எதிராக ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்திலும் மைத்திரி புகார் கொடுத்தார். அதன்பேரில், கார்த்திக் கவுடா மீது பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திக் கவுடாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு, பெங்களூர் நகர 63வது செஷன்ஸ் கோர்ட்டில் கார்த்திக் கவுடா தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, ரூ.2 லட்சம் பிணையத்தொகை, 2 முக்கியஸ்தர்களின் கையெழுத்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கார்த்திக் கவுடாவுக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30ம் தேதிகளில் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
முன்ஜாமீன் பெற்ற இரு நாட்கள் கழித்து கார்த்திக் கவுடா முதன்முறையாக காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருக்கு மருத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு, விசாரணைக்கும் உள்ளானார்.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு படி 15ம்தேதியான இன்றும் கார்த்திக் கவுடா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரியும், உதவி கமிஷனருமான ஓம்பிரகாஷ் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications