காஷ்மீரில் 4 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியது !
காஷ்மீரில் 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீர்: காஷ்மீரில் கடந்த 4 மாதங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.
கடந்த ஜீலை மாதம் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வாணி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 86 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கடைகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவை மூடப்பட்டன.
இதனிடையை பிரிவினைவாதிகளும் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பிரிவினைவாதிகள் தங்கள் போராட்டங்களை வார இறுதி நாள்களில் நிறுத்தி வைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல்முறையாக அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்திருந்தன. ஸ்ரீநகரில் சாலைப் போக்குவரத்து அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications