காஷ்மீர் வெள்ளம்: உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தோம்- வங்கி அதிகாரி கண்ணீர் பேட்டி
திருவனந்தபுரம்: தங்கியிருந்த ஹோட்டலை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டதால், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மாடியில் பசி, பட்டினியோடு மீட்கப்படுவதற்காக காத்திருந்தோம் என்று கேரளா வங்கி அதிகாரி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பேய்மழைகாரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலமே சிதைந்து போனது.
இங்கு சுற்றுலா சென்றவர்களும் மலையேறும் பயிற்சிக்கு போனவர்களும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடினர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அபூர்வா போஸ் மற்றும் அவரது குழுவினர், முதல்வர் உம்மன்சாண்டியின் முயற்சியால் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் கேரளா திரும்பினர்.

இதுபோல மும்பையில் வங்கி அதிகாரியாக பணிபுரியும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவரது மனைவி வித்யா மற்றும் மகள் விபா ஆகியோர் கடந்த வாரம் காஷ்மீருக்கு இன்பச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
இந்த தகவலை திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். அவர்கள் முதல்வர் உம்மன்சாண்டியிடம் கூறி, பாலசுப்பிரமணியன் குடும்பத்தை மீட்க உதவும்படி கோரினர்.
அவரும் மத்திய அரசை தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணியன் குடும்பத்தை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தார். நேற்று பாலசுப்பிரமணியனும், அவரது மனைவி வித்யா, மகள் விபா ஆகியோர் கொச்சி திரும்பினர்.
விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
காஷ்மீரில் தான் பட்ட கஷ்டங்களை பாலசுப்பிரமணியன் கண்ணீர் மல்க கூறினார்.
சினிமாக்களில் தான் திடீரென பெருவெள்ளம் வந்து ஊரையே காலி செய்யும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். காஷ்மீரில் இதனை நேரில் பார்த்த போது அச்சத்தில் உறைந்து போனேன். வெள்ளம் மக்களை இழுத்துச் சென்ற கோரக்காட்சியும், அதில் சிக்கி மீள முடியாமல் தவித்த மக்கள் எழுப்பிய அவல குரலும் மனதை உலுக்கியது.
ஹோட்டல் மாடியில் உயிரை கையில் பிடித்தபடி 3 நாட்கள் தவித்தோம். கை நிறைய பணம் இருந்தும் பட்டினி கிடந்தோம். இறைவனின் அருளாலும் முதல்வர் உம்மன்சாண்டியின் முயற்சியாலும் மீட்கப்பட்டு இன்று ஊர் திரும்பி உள்ளோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications