‘சேர்ந்து’ அமர்ந்ததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட 9 மாணவ, மாணவிகள்... கேரளாவில்!
கோழிக்கோடு: கேரளாவில் இருபாலர் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் மாணவர்களும், மாணவிகளும் அருகருகே அமர்ந்ததற்காக பேராசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இயங்கி வருகிறது பரூக் கல்லூரி. 67 வருட பழமையான இந்தக் கல்லூரியில் மாணவர்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். இதனாலேயே இந்த கல்லூரி பிரபலமடைந்தது என்றும் கூறலாம்.
இந்நிலையில், நேற்று அதிரடியாக இந்தக் கல்லூரியில் படித்து வந்த 9 மாணவ, மாணவிகள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காரணம், அவர்கள் வகுப்பறையில் அருகருகே அமர்ந்திருந்தது தான் எனக் கூறப்படுகிறது. மேலும், பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே மீண்டும் அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், ‘வகுப்பறையில் மாணவர்களும், மாணவிகளும் அருகருகே அமர்வதை அனுமதிக்க முடியாது. அது கல்லூரி விதிமுறைக்கு எதிரானது எனக் கூறி எங்களை மலையாள ஆசிரியர் வகுப்பறையில் இருந்து வெளியில் அனுப்பி விட்டார்' எனத் தெரிவித்துள்ளனர்.
67 வருட பழமையான தங்கள் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் அருகருகே அமர வைக்கப்படும் வழக்கம் இல்லை. இதனை பாலின வேறுபாடு பார்க்கிறோம் எனக் கூறமுடியாது. தாங்கள் இவ்வாறு செயல்படுவதையே பெற்றோர்களும் விரும்புவதாக அக்கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications