ஆசிரியர் நியமனம் கோரி... தமிழக எல்லையில் கேரள அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
அச்சன்கோவில்: அச்சன்கோவில் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தி தமிழக -கேரள எல்லையில் கேரள கல்விஅமைச்சர் உருவ பொம்மை எரித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக -கேரளா எல்லைப் பகுதியான அச்சன்கோவில் கேரள மாநிலத்தில் உள்ளது.இங்கு சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், இரண்டு மாநிலத்திற்கும் தொடர்பு இல்லாத தனி தீவு போன்று இவ்வூர் மேற்குத்தொடர்ச்சி மலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இங்குதான் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலும், மணலாறு, கும்பாஉருட்டி அருவிகளும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு புனலூரிலிருந்து கேரளமாநில அரசு பேருந்து தினமும் அதிகாலை 6.30மணிக்கும்,மதியம் 11.மணிக்கும்,மாலை 3.30மணிக்கும் செங்கோட்டை வழியாக 3பேருந்துக்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வூரில் 1ம் முதல் 10 ம் வகுப்புவரை 380 மாணவ,மாணவிகள் பயிலும் அரசு பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் அனைத்து வசதிகள் இருந்தும் 10 ஆசிரிய,ஆசிரியைகள் பணியாற்றவேண்டிய பள்ளியில் தற்போது 4 பேர்மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.இது குறித்து இவ்வூர் பொதுமக்கள் கேரளா அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஆசிரியர் நியமனம் வேண்டி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் போரட்ட குழுவினர் இணைந்து இன்று அச்சன்கோவிலில் கடையடைப்பு மற்றும் பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புதிய ஆசிரியரை நியமனம் செய்ய வலியுறுத்தி மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு மறியலிலும்,முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
அப்போராட்டத்தில், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அம்மாநில கல்வியமைச்சரை (அப்துர் ரெப்)கண்டித்து கோஷங்களை எழுப்பி அவரது உருவபொம்மையை அவர்கள் எரித்தனர். இதனால் அங்கு பரப்பரப்பும், பதட்டமும் உருவானது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications