வெள்ள நிவாரணத்திற்காக கொடுத்த அரிசிக்கு ரூ.233 கோடி பணம் கேட்கும் மத்திய அரசு.. கேரள அரசு ஷாக்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவியாக அளித்த அரிசிக்கு பதிலாக கேரளா அரசு 233 கோடி ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவியாக அளித்த அரிசிக்கு பதிலாக கேரளா அரசு 233 கோடி ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லையென்றால் இந்த பணம் வெள்ளம் நிவாரண நிதியில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றுள்ளது.
கேரளாவில் தற்போதுதான் மழை ஓய்ந்துள்ளது. அங்கு வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.
கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தால் பல வருடம் அவர்கள் பின்னோக்கி சென்று இருக்கிறார்கள்.

உதவி
கேரளாவிற்கு மத்திய அரசு 600 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. அது மட்டும் இல்லாமல் எரிபொருள், சிலிண்டர் ஆகியவைகளை வழங்கியது. மேலும் அவசர உதவியாக பல்வேறு கிடங்குகளில் இருந்து 89,540 மெட்ரிக் டன் அரிசியை வழங்கியது.

பணம் கேட்கிறார்கள்
இந்த நிலையில்தான் இந்த அரிசிக்கு மத்திய அரசு பணம் கேட்கிறது. அதாவது இது அவசரத்திற்கு கொடுத்தது, ஆனால் இதற்கான பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்காக கேரளா அரசிடம் மத்திய அரசு, 233 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளது.

கொடுக்கவில்லை என்றால்
இந்த பணத்தை கேரளா அரசு கொடுக்கவில்லை என்றால் அதை திரும்ப பெற மத்திய அரசு திட்டம் ஒன்று வைத்துள்ளது. அதன்படி, கேரளா இதை திரும்ப கொடுக்கவில்லை என்றால், ஏற்கனவே அறிவித்துள்ள ரூபாய் 600 கோடி ரூபாய் நிதி உதவியில் இருந்து இதை கழித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதை குறித்து நேற்று கேரளா அரசுக்கு அறிவிப்பு சென்றுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு நிதி
அதோடு கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவம் அதற்காக சேவை கட்டணம் வசூலிக்க உள்ளது. ஏற்கனவே காஷ்மீரில் வெள்ளத்தின் போது நிதி உதவியாக ரூபாய் 1200 கோடி வழங்கப்பட்டது. அதில் ராணுவம் சேவைக்கட்டணமாக ரூபாய் 500 கோடியை எடுத்துக் கொண்டது. இது கேரளாவிலும் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications